01. கே.பி: உண்மையும்-பின்னணியும் என்ன?    -பழ.நெடுமாறன்

Picture
September 03, 2010
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனராகவும், நிதிதிரட்டுபவராகவும் இருந்த குமரன் பத்மனாபன் என்ற கே.பி. தற்போது சிங்கள அரசின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் சிங்கள அரசிடம் சிக்கினாரா? அல்லது அவரே தன்னை ஒப்புக் கொடுத்தாரா? - என்ற கேள்விகள் உலகத் தமிழர்களின் மத்தியில் இன்றும் உலவிவருகின்றன. அவர் டி.பி.எஸ். செயராஜ் என்பவருக்கு அளித்த நேர்காணலில் பரபரப்பான சில செய்திகளைக் கூறியிருக்கிறார். இச்செய்திகளின் நம்பகத்தன்மையை ஆராய்வதற்கு முன்பாக புலிகள் இயக்கத்திலிருந்து இவர் விலக்கப்பட்ட சூழ்நிலையைத்
தெரிந்துகொள்வது நல்லது. 2003ஆம் ஆண்டு சனவரியிலிருந்து இவர் புலிகள் இயக்கத்தின் சகலப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

02. ஈழம் - இனிச் செய்ய வேண்டியது என்ன?     -கலைவேலு  

Picture

03. செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்  - சூரியதீபன்

Picture

04. கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!-- பா.செயப்பிரகாசம்

Picture
2010 சனவரி மத்தியில் கொழும்பு சென்றிருந்த வேளையில், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் செம்மொழி மாநாடு பற்றி கருத்துக்கள் கேட்டார்கள். செம்மொழி மாநாட்டின் உயிர் நிலையானது அரசியல் ஆதாயம் பெறுவதில் தங்கியுள்ளது பற்றி- அதற்கான எதிர்வினைகள் எங்களிடமிருந்து தொடங்கியுள்ளது பற்றி எடுத்து வைத்தேன்.

அவர்களுடன் உரையாடிய வேளையில் 2011 – சனவரியில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை ஒழுங்கு செய்யவிருப்பதாகவும், அதன் பொருட்டான ஆலோசனைக் கூட்டம் சனவரி 3ம் நாள் நடத்தப் பெற்றதெனவும் தெரிவித்தார்கள். பேரா.கா.சிவத்தம்பி முன்னிலை வகித்துள்ளார். ஆஸ்திரேலியாவிலுள்ள முருகபூபதி, நடேசன், லண்டனிலுள்ள ராசேஸ்வரி பாலசுப்பிரமணியம் முன்கை எடுத்துச் செய்கிறார்களெனக் குறிப்பிட்டார்கள்.


05 .காசா: அறங்கள் மடிந்த இடம் -                    அ.முத்துக்கிருஷ்ணன்                                                                 

Picture
உலக நாடுகளின் தலைவர்கள் பல பெரும் நகரங்களில் கூடுவதும், மாநாடுகள் நடத்துவதும் வாடிக்கையாகி விட்டது. இவர்களின் சந்திப்புகள் அர்த்தம் பொதிந்தவை தானா, இவர்கள் அப்படி எதைப் பற்றிப் பேசிவிட்டு குரூப் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள் என்று ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இந்த குரூப் போட்டோவை இவர்கள் தங்களின் வீடுகளில் மாட்டிக் கொள்வார்களா, இல்லை வேறு எங்குதான் இதை வைப்பார்கள் என்பது அடுத்த கேள்வி. சந்தித்தவர்களே மீண்டும் மீண்டும் சந்திப்பது, கை கொடுப்பது சலிப்பாக இருக்காதா? உலக நிகழ்வுகளின் போக்குகளையும் அது சார்ந்து இவர்களின் பிரதிபலிப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரும் குழப்பமே மிஞ்சுகிறது

ஈராக்-ஆப்கான் மீது போரும் வியாபாரப் படையெடுப்பும் ஒன்றை விஞ்சி ஒன்று எனப் பின்தொடர்கிறது. இலங்கையில் நடந்த-நடக்கும் இனப் படுகொலைகள், அதனைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்களின் படையெடுப்பு, கொசோவோ, காங்கோ, சோமாலியா என நீளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியல் குருதியில் நனைந்து கிடக்கிறது. பெரும் போர்க் குற்றங்களுக்குத் தகுதி படைத்த செயல்களைச் செய்யும் அரசுகளுடன் கூச்சமின்றி வியாபார நிறுவனங்கள் ஊடலில் ஈடுபடுவது விழாக்களாகக் கொண்டாடப்படுவது சகஜமாகிவரும் வேளையில் பல கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளது..


பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே! எழுத்தாளர் எஸ்.பொ அவர்களால் வெளியிடப்பட்ட பதில் அறிக்கை

Picture
"யாதும் ஊரே...... தீதும் நன்றும்' என்ற தலைப்பில் எனக்கு எதிராக சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டின் ஏக தலைவராகத் தம்மை நியமித்துக்கொண்ட முருகபூபதி வெகுண்டெழுந்து உண்மைகளை மறைத்தும் மறுத்தும் யாழ் இணையத்தில் பதிவு செய்த கட்டுரை என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதைப் பார்த்ததும் சர்வதேச
எழுத்தாளர்களுடைய தலைவராகிவிட வேண்டுமென்ற பதவி மோகத்திலே அவர் தமது சுயமூளையை இழந்து மனப்பிறழ்விலே அவலப்படுகிறாரோ என்ற அநுதாபமே எனக்கு ஏற்பட்டது. அவருடைய உளறல்களை மதித்து ஒரு பதில் எழுதுதல் அவசியமில்லையாயினும், வரலாற்று ஆவணங்கள் செப்பமாக பாதுகாக்கப்படுதல் என்பது இன்றளவும் என் தர்மமாக விடிந்துள்ளதால் இப்பதில் தக்கது.

சர்வதேச ஈழத் தமிழர்களுடைய தலைவர் என்று தம்மை குடமுழுக்குச் செய்துள்ள கே.பி., ராஜபக்சே சகோதரர்களினால் மூளைச்சலவை செய்யப்பட்டு சர்வதேச தமிழ் இனத்தைக் குழப்பத்திற்குள்ளாக்கும் வகையில் வெளியிடும் அறிக்கைகளில் பொதிந்துள்ள உளறல்களைத் தமிழ்நாட்டில் வாழும் ஈழ உணர்வாளர்கள் அனைவரும் ஒருமுகமாகக் கண்டித்து, அவை உண்மைக்குப் புறம்பானவை என்பதைத் தர்க்க ரீதியாக நிறுவியும் வருகிறார்கள். (மேலும்)


பிளே பாய்களுக்கு ஆயுள் கம்மி

Picture
"நம்மளையெல்லாம் ஃபிகருங்க பார்த்தாலே படிஞ்சிரும் மச்சி!" ன்னு பீலா விட்டு திரியும் பெண் பித்தர்களான பிளேபாய்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!
சதா எந்த நேரமும் பெண்கள் பற்றிய நினைப்பும், அவர்களை கவிழ்ப்பது எப்படி? என்பது குறித்து ஏக சிந்தனையில் ஆழ்ந்து போகும் பிளேபாய்களுக்கு ஆயுள் குறைச்சல் என்று தெரியவந்துள்ளதாம்.
பிளேபாய்கள் என்றால் யார்? சுருக்கமாக பெண் பித்தர்கள் என்று சொல்லிவிடலாம்
இதில் பல ரகத்தினர் உள்ளனர். காதில் கடுக்கன், கருப்பா, செம்பட்டையா என்றே யூகிக்க முடியாத அளவுக்கு பிளீச்சிங் என்ற பெயரில் விநோத சாயம் பூசி, கொத்தி குதறியெடுத்த சிகையலங்கராத்துடன், "பெண்களை கவிழ்க்கிறேன்" பேர் வழி, மன்மத உணர்வு பொங்கி வழிய வளைய வருபவர்கள்.
இதுபோன்ற அபத்தங்கள் எதுவுமே இன்றி, கமுக்கமாக செயல்பட்டு பெண்களை கவிழ்க்கும் வகையறாக்கள்.
இதுமாதிரியெல்லாம் இல்லாமல் பணம், வேலை, பதவி ஆசைகாட்டி அல்லது மிரட்டி பெண்களை அடைபவர்கள் ஒருபுறம் என ரக வாரியாக உள்ளனர்.(மேலும்)